Tuesday, February 1, 2011

தெரியவில்லை..!

வசந்தம் கொண்டுவரும் வரையில் தென்றலுக்குத் தெரியவில்லை;
தேன் ஊற்றெடுக்கும் வரையில் மலருக்குத் தெரியவில்லை;
அமுதம் கடைந்தேடுக்கும் வரையில் கடல் மத்துக்கு தெரியவில்லை;
மெல்லிசை ஈட்டும் வரையில் வீணைக்குத் தெரியவில்லை;
ஓவியம் வரையும் வரையில் ஓவியனுக்குத் தெரியவில்லை;
அதே போன்று
ஏன் ! உன்னைப் பெற்றெடுக்கும் வரையில் எனக்கும் தெரியவில்லை;

எனக்குள் கருவாகி இருக்கும் என் உயிர் நீ தான் என்று.

"குழந்தையை அணைத்துக் கொண்டே ஆனந்தம் அடையும்
அம்மாவின் மனக்குரல்..!"